Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு : 166 பேர் பலி

ஏப்ரல் 09, 2020 06:01

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 473 ஆகவும் அதிகரித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் 1,135 பேருக்கும், தமிழகத்தில் 738 பேருக்கும்,டில்லியில் 669 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும், உ.பி.,யில் 361 பேருக்கும், கேரளாவில் 345 பேருக்கும், ராஜஸ்தானில் 381 பேருக்கும் ம.பி.,யில் 229 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்