Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 473 ஆகவும் அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் 1,135 பேருக்கும், தமிழகத்தில் 738 பேருக்கும்,டில்லியில் 669 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும், உ.பி.,யில் 361 பேருக்கும், கேரளாவில் 345 பேருக்கும், ராஜஸ்தானில் 381 பேருக்கும் ம.பி.,யில் 229 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.